Home இலங்கை கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ். மாவட்டம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற சிறிய ரக உழவு இயந்திரம் மற்றும் ஹயஸ் ரக வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொடிகாமம் இராமாவில் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றது. அதில் சரசாலை வடக்கை சேர்ந்த க. விக்னேஸ்வரன் என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் உதவிக்கு சென்ற மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சரசாலையில் இருந்து வியாபர நோக்குடன் யாழ்.- கண்டி நெடுஞ்சாலையில் (ஏ. 9) சிறிய ரக உழவு இயந்திரத்தில் (லான்ட்மாஸ்ரர்) இருவர் பயணித்துகொண்டிருந்த வேளை அதே திசையில் வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் பின் பக்கமாக மோதியதிலையே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது தொடர்பில் ஹயஸ் வாகன சாரதியை கைது செய்துள்ள கொடிகாம காவல்துறையினர் விசராணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More