Home இலங்கை  மயிலிட்டி கலைமகள், 28 ஆண்டுகளின் பின்னர் – 200ஆவது வயதில் சொந்த நிலத்திற்கு செல்கிறாள்….

 மயிலிட்டி கலைமகள், 28 ஆண்டுகளின் பின்னர் – 200ஆவது வயதில் சொந்த நிலத்திற்கு செல்கிறாள்….

by admin

இருபத்தெண்டு ஆண்டுகளின் பின்னர் சொந்த நிலத்திற்கு செல்லுகிறது யாழ் வலிவடக்கு கலைமகள் மகா வித்தியாலயம். நாளை 6ஆம் திகதி கலைமகள் வித்தியாலயத்தின் பூர்வீக நிலம் இலங்கை அரச படைகளால் விடுவிக்கப்பட இருக்கிறது. தன்னுடைய 200ஆவது வயதில் இப் பாடசாலை தனது செந்த நிலத்திற்கு செல்வுகின்றது விசேட அம்சமாகும்.

யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்தியாலம் 1818ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது . 1990ஆம் ஆண்டு இலங்கை அரச படைகளின் யுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தப் பாடசாலை இடம்பெயர்ந்தது. இப் பாடசாலை இலங்கையின் பழைமையான பாடசாலைகளில் ஒன்றாகும். இடப்பெயர்வு இந்தப் பாடசாலையை கடுமையாக பாதித்தது.

மக்களைப்போலவே இடம்பெயர்ந்த இந்தப் பாடசாலை தற்காலிமாக சுன்னாகத்தில்  அகதியாக இயங்கி வந்தது. தமது பாடசாலையின் பூர்வீக நிலப் பகுதியை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாக இப் பாடசாலை சமூகம் குரல் கொடுத்து வந்தது.இடம்பெயர்ந்த நிலையிலும் பல்வேறு சாதனைகளை இந்தப் பாடசாலை நிகழ்த்தி வந்தது.

எனினும் இடப்பெயர்வினால், இடவசதியின்மை, மாணவர்களின் இடைவிலகல் பாடசாலை வளப் பாதிப்பு என பல இடர்களுக்கு முகம் கொடுத்தது. 200 ஆண்டு பழமையான இந்தப் பாடசாலை விரைவில் சொந்த இடத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டிருப்பின் பல்வேறு சாதனைகளை இன்னமும் நிகழ்த்தியிருக்கும்.

எவ்வாறெனினும், அண்மையில் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் துறைமுக அபிவிருத்திக்காக அடிக்கால் நாட்டப்பட்டது. இதையடுத்து, மிகவும் பழமை வாய்ந்த மயிலிட்டி கலை மாகள் வித்தியாலயம் விடுவிக்கப்படவுள்ளது. இதன்போது, இந்தப் பாடசாலையுடன் 3 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More