Home இந்தியா இந்தியாவில் விற்பனையாகும் 68.7 சதவீத பால், பால் பொருட்கள் தரமானவையல்ல

இந்தியாவில் விற்பனையாகும் 68.7 சதவீத பால், பால் பொருட்கள் தரமானவையல்ல

by admin


இந்தியாவில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல என விலங்குகள் நல வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.  மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையகம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி இந்தியாவில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. அன்றாடம் நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. பாலில் சவர்க்காரத்தூள் காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்றன கலப்படம் செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாள் பயன்பாட்டுக்காகவும் அதில் திட்டமிட்டே யூரியா, ஸ்டார்ச், போர்மலின் போன்றவற்றையும் கலக்கின்றனர் எனவும் இதுபோன்ற கலப்படம் உடல் உறுப்புகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் இந்தியாவில் 2025-ம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான பல்வேறு நோய்களுக்கு உள்ளாக நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை எச்சரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More