Home சினிமா மீண்டும் கதையின் நாயகனாக ராஜ்கிரண்

மீண்டும் கதையின் நாயகனாக ராஜ்கிரண்

by admin



தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தை அடுத்து மீண்டும் கதாநாயகனாக ராஜ்கிரண் நடிக்கின்றார். இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்திலேயே அவர் இவ்வாறு நாயகனாக நடிக்கின்றார்.  கதாநாயகன், முக்கிய கதாபாத்திரம், குணச்சித்திர வேடம், வில்லன் என பல அவதாரங்கள் எடுத்த ராஜ் கிரண், தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் கதையின் நாயகனாக மற்றுமொரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா அடுத்த திரைப்படமாக ‘போக்கிரி ராஜா’ படத்தை இக்கியிருந்தார். தற்போது, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில்,  இப் படத்தையடுத்து,  ராஜ்கிரணை முன்னணி கதாபாத்திரமாக வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ராஜ்கிரணுடன் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய நடிகர்-நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது, நவீன தொழில்நுட்பத்தை விரிவாக அலசும் படமாக உருவாகுவதாகவும் சொல்லப்படுகிறது. கல்பத்தரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இப் படத்தை தயாரிக்கிறார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More