Home இலங்கை வறண்ட நிலையில் காணப்படும் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் பாலாவி தீர்த்தக்கரை :

வறண்ட நிலையில் காணப்படும் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் பாலாவி தீர்த்தக்கரை :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தற்போது மழை இல்லாத காரணத்தினாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாகவும் குளங்கள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர் வற்றியுள்ளது. இதன் காரணமாக மக்களும், கால் நடைகளும் நீரை பெற்றுக்கொள்ளுவதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

-இந்த நிலையில் பாடல் பெற்ற புனித தலமான மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் பாலாவி தீர்த்தக்கரையும் நீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் திருக்கேதீஸ்வர திருத்தளத்திற்கு வரும் பக்தர்கள் பாலாவி தீர்த்தக்கரையில் தமது நேர்த்திக்கடனை செலுத்துவதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More