Home உலகம் பாரிசில் இனம்தெரியாத நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் கடுங்காயம்…

பாரிசில் இனம்தெரியாத நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் கடுங்காயம்…

by admin

பாரிஸ் நகரின வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தெருவில் இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் 2 சுற்றுலாப் பயணிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 4 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் பிரித்தானியாவினைச சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என அறியப்பட்டு உள்ளனர்.பாரிஸின் வட கிழக்கு பகுதியில், உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதல் நடந்த இடத்தில் பலர் பெண்டக் என்ற விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் பந்தினால் தாக்குதல்தாரியை தாக்கியதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி பின் வேறோரு இடத்தில் வைதத்து பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீது தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து வருவதாகவும், பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் பிரித்தானிய ; வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.கத்தியால் குத்திய நபரை காவற்துறையினர் கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸின் தலைநகர் பாரீசில் 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ந் திகதி பயங்கரவாதிகள் மேற்கொண்ட கொடூரமான தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டதுடன் தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More