Home உலகம் 11 இளைஞர்கள் கடத்தல் – நேவி சம்பத் – விஜயகுணவர்த்தன CIDயில் முன்னிலையாகவில்லை….

11 இளைஞர்கள் கடத்தல் – நேவி சம்பத் – விஜயகுணவர்த்தன CIDயில் முன்னிலையாகவில்லை….

by admin

முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) இன்று முன்னிலையாகவில்லை.

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று, சட்டவிரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவை விசாரணைக்கு இன்று காலை 10 மணிக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிTஅறிவித்திருந்தது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்கை தொடர்பிலான விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.விஜேகுணரத்ன தற்போது மெக்சிகோவில் இருப்பதால் அவரால் இன்று குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விஜேகுணரத்ன மெக்சிக்கோவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில், இன்று வரை தாம் அறிந்திருக்கவில்லை என குற்ற புலனாய்வு பிரிவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More