Home இலங்கை மன்னார் மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணி அறிவித்தலின்றி நிறுத்தம்

மன்னார் மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணி அறிவித்தலின்றி நிறுத்தம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி இன்று (10) திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களுமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 67 தடவைகள் அகழ்வுகள் இடம் பெற்ற நிலையில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதினால் இன்று திங்கட்கிழமை(10) காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

எனினும் இன்றைய தினம் அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை. குறிப்பாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் அங்கு செல்லவில்லை. இதன் காரணமாக அகழ்வுகள் இடம் பெறவில்லை.

இதுவரை குறித்த வளாகத்தில் 120 மனித எலும்புக்கூடுகள்; அடையாளம் காணப்பட்டதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More