Home இலங்கை முதலமைச்சரின் பிறந்த நாளில் வடமாகாணசபையின் இறுதி அமர்வு..

முதலமைச்சரின் பிறந்த நாளில் வடமாகாணசபையின் இறுதி அமர்வு..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


வடமாகாணசபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாகாணசபையின் இறுதி அமர்வு அக்டோபர் மாதம் 23ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ளது.

வடமாகாணசபையின் 131வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

வடமாகாணசபையின் ஆயுட்காலம் அல்லது ஆட்சிக்காலம் அக்டோபர் மாதம் 25ம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்னும் மீதமாக 2 அமர்வுகள் இருக்கின்றன. இதற்கமைய இறுதி அமர்வு 23ம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது.

அன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளாகும். எனவே அதனை அறிந்து 23ம் திகதி இறுதி அமர்வை ஒழுங்கமைத்துள்ளோம்.

மேலும் இறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது.
அது கண்ணதாசனின் பாடலுக்கமைய மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும். இறுதி அமர்வுக்கு முன் அமர்வு இம்மாதம் 27ம் திகதி நடைபெறும் என அவை தலைவர் மேலும் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More