Home இலங்கை கொடிகாமம் காவற்துறையினரின் வாகனத்தை கடத்தியவர்கள் கைது….

கொடிகாமம் காவற்துறையினரின் வாகனத்தை கடத்தியவர்கள் கைது….

by admin

2ஆம் இணைப்பு

கொடிகாமம் காவற்துறையினரின் வாகனமொன்றை, கடத்திச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர் என கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறையினரின் வாகனம், நேற்றிரவு கடத்தப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடத்தப்பட்ட கொடிகாமம் காவற்துறையின் வாகனம் மீட்பு –கடத்தியவர் துப்பாக்கியுடன் தலைமறைவு?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கொடிகாமம் காவற்துறையின் வாகனத்தை, ஆயுதங்கள் மற்றும் ஒரு காவற்துறையி உத்தியோகஸ்தருடன் தனி நபர் ஒருவர் கடத்தி சென்றமை தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கொடிகாம காவற்துறையினர் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11.09.18) நடைபெற்ற திருமண விருந்து உபசார நிகழ்வில் மோதல் சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது தொடர்பில் அங்கிருத்தவர்களால் காவற்துறை அவசர சேவை பிரிவான 119 தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கபப்ட்டது.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையிவாகனத்தை வீதியோரம் நிறுத்தி விட்டு ஒரு காவற்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்க கூறிவிட்டு ஏனையவர்கள் மோதல்களை தடுக்க சென்று இருந்தனர்.

மோதலை தடுக்க சென்ற காவற்துறையினர், மோதலை தடுத்து , மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்டனர். அதன் போது அங்கிருந்தவர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அந்நிலையில் அப்பகுதியில் நின்ற ஒருவர் காவற்துறையின் ” கப் ” ரக வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளார். அதன் போது வாகனத்தின் பின்னால் இருந்த காவற்துறை உத்தியோகஸ்தர், வாகனம் சுமார் 300 மீற்றர் தூரம் சென்றதும் சுதாகரித்து வாகனத்தில் இருந்து குதித்து வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி பிரயோகம் செய்தார். இருந்த போதும் வாகனத்தை எடுத்து சென்றவர் அதனை மிக வேகமாக செலுத்தி சென்றார்.

அதனை அடுத்து அங்கிருந்த காவற்துறையினர் அங்கிருதவர்களின் மோட்டார் சைக்கிள்களை வாங்கி , தமது வாகனத்தை துரத்தி சென்றனர். வாகனம் எடுத்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள பகுதியில் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில் காவற்துறை  வாகனம் மீட்கப்பட்டது.

அதேவேளை வாகனத்தில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் துப்பாக்கி இருந்ததாகவும் , அதனை காவற்துறை மீட்க வில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் காவற்துறையினர் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

குறித்த சம்பவத்தினை அடுத்து கொடிகாம காவற்துறை நிலையத்தில் இருந்து மேலதிக காவற்துறை வரவழைக்கப்படும் , சாவகச்சேரி காவற்துறை நிலையத்தில் இருந்தும் காவற்துறை வரவழைக்கப்பட்டு துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பகுதியில் நேற்றைய தினம் இரவும் முழுவதும் பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. இருந்த போதிலும் வாகனத்தை கடத்தி சென்ற நபரை காவற்துறையினர் இன்று புதன்கிழமை காலை வரையில் கைது செய்யவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More