Home உலகம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை :

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை :

by admin

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் ஜனாதிபதி அன்டனியோ சாகாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடோரில் 2004-2009 ஆண்டுகளில் ஜனாதிபதியாக பதவி வகித்த, 53 வயதுடைய அன்டனியோ சாகா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவரது மகனின் திருமணத்தின்போது 2016 ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.வழக்கு விசாரணையின்போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதனையடுத்து அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நாட்டு அரசுக்கு 260 மில்லியன் டொலர் தொகையை அவர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அன்டனியோ சாகா அரசு உயர் அதிகாரிகள் 6 பேருக்கு தலா 3 ஆண்டு முதல் 16 ஆண்டு வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More