Home இலங்கை அடுத்து வரும் தேர்தல்களில் மகிந்த ஆதரவுக் கட்சியினரும், வேட்பாளர்களுமே வெற்றிபெறுவர்

அடுத்து வரும் தேர்தல்களில் மகிந்த ஆதரவுக் கட்சியினரும், வேட்பாளர்களுமே வெற்றிபெறுவர்

by admin

இலங்கையில நடைபெறும் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆதரவு கட்சியே வெற்றிபெறும் என எக்கனமிஸ்ட் சஞ்சிகை Economist Intelligence Unit (EIU) யின் இலங்கை குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 2020 நடுப்பகுதியில் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனங்களை கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கும் என தாம் கருதுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி தேர்தலில்   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்ற வெற்றியானது அக்கட்சிக்கான ஆதரவையும் தற்போதைய அரசாங்கத்திற்கெதிரான மனோநிலை அதிகரித்து வருவதையும் புலப்படுத்தியுள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக ஐக்கியதேசிய கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ மக்களின் நம்பிக்கையை மீளப்பெறமுடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மகிந்த ராஜபக்சவின் நெருங்கியசகா ஒருவரோ அல்லது உறவினரோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மகிந்த தரப்பு மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளதானவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் சிறிய சிறிசேன தரப்பு வெற்றிபெற்றிருந்த போதும் வாக்காளர் ஆதரவில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் மகிந்த தரப்பு வேட்பாளர் வெற்றிபெறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில் புதிய அரசமைப்பு முயற்சிகள் கவனத்தை இழக்கும் என தாங்கள் கருதுவதாகவும் ,2020 வரை ஆட்சியிலிருப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படும் என்பதால் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கவனத்தை இழக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More