Home இலங்கை 2ஆம் இணைப்பு -பன்றிக்கெய்த குள, புகையிரத விபத்தில் பலியானவர்களின் விபரம்…..

2ஆம் இணைப்பு -பன்றிக்கெய்த குள, புகையிரத விபத்தில் பலியானவர்களின் விபரம்…..

by admin

பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி…

Sep 16, 2018 @ 06:19

மரணமடைந்தவர்களின் விபரம்:

கமலநாதன் சிவரஞ்சனி (30), சுவீடன்.
காண்டீபன் யமுனா ரஞ்சனி (32), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.
காண்டீபன் டிசாலினி (13), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.
இசை ஞானவதி யோகரத்னம் (56), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.

காயமடைந்தவர்கள்:
ஜேம்ஸ் கமலநாதன் (34), சுவீடன்.
கமலநாதன் ஜெசிகா (06), சுவீடன்.

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. புகையிரதம் வரும் வேளை காரில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதன் போது காரில் பயணித்தவர்களில் நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தானர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More