Home இலங்கை திருமண நிகழ்வில் கைகலப்பு – கத்திக்குத்தில் முடிந்தது….

திருமண நிகழ்வில் கைகலப்பு – கத்திக்குத்தில் முடிந்தது….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

திருமண நிகழ்வில் ஏற்பட்ட கைகலப்பு கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது. வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் நேற்று சனிக்கிழமை (15.09.18) நடைபெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த தந்தை அந்தோணிமுத்து அவருடைய மகன் அமல்ராஜ் ஆகியோரே கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அப்பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வின் போது மாலை வேளை மதுபோதையில் இருவர் முரண்பட்டு கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன் போது ஒருவர் மற்றொருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

அந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் அன்றைய தினம் நள்ளிரவு தன்னை தாக்கியவரின் வீட்டுக்குள் புகுந்து தன் மீது தாக்குதல் நடாத்தியவருக்கும் அவருடைய மகனுக்கும் கத்தியால் குத்தி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More