Home உலகம் இலங்கைக் கடவுச் சீட்டு வைத்திருப்போர் நாடு திரும்பலாம் அது அவர்களின் நாடு – இது ராஜிவ் கொலை வழக்கில் கைதானவர்களுக்கும் பொருந்தும்…

இலங்கைக் கடவுச் சீட்டு வைத்திருப்போர் நாடு திரும்பலாம் அது அவர்களின் நாடு – இது ராஜிவ் கொலை வழக்கில் கைதானவர்களுக்கும் பொருந்தும்…

by admin

இலங்கைக் கடவுச் சீட்டை கொண்டிருப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் விரும்பினால் இலங்கை திரும்பலாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், தந்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் இலங்கைக்கு ஏற்றுக்கொள்வீர்களா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அதன் போது, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எவராக இருப்பினும் இலங்கைக்கு வரலாம் அது அவர்களின் நாடு எனவும் இந்த விடயம் யாராக இருந்தாலும் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதே சிறந்த தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியை விட பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அதற்காக தான் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ள அவர்,

அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டிவந்திருப்பினும் தனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என நினைப்பதாகவும் ஆனால் தான் அவ்வாறு போட்டியிடாது வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் அரசியலுக்கு வரவேற்பதாகவும் இருவரும் ஆற்றலும் பிரபலமும் மிக்கவர்கள் எனவும் யார் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் தீர்மானிப்பாளர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அரசியல் என்பது சினிமா போன்று அல்ல எனவும் இருப்பினும் அவர்கள் இருவரும் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களும் மக்களின் கஷ்டங்களை தெரிந்தவர்களும் என்பதால் அவர்களினால் சாதிக்க முடியும் என நம்புவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தபடுகின்றமை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, தனக்கு அது தொடர்பில் தெரியாது எனவும் தங்கள் ஆட்சியில் இது போன்று நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனவும் அந்த முடிவினை அனைத்து மீனவர்கள் ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More