Home பிரதான செய்திகள் ஆசிய கோப்பை தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது

ஆசிய கோப்பை தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது

by admin

இன்றையதினம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 91 ஓட்ட வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வென்றுள்ள நிலையில் தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது. இரு அணிகளுக்குமிடையரான போட்டியில் நாணயசச்சுழற்சியில் வென்ற வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 249 ஓட்டங்களைப் பெற்றதுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 250 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்து 91 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி மூலம் ஆசிய கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது. ஆசிய கோப்பையை இலங்கை அணி ஐந்து முறை கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More