Home இலங்கை வடமராட்சி கடற்பரப்பில், தென்னிலங்கை மீனவர்கள் பிடிக்கப்பட்டனர்….

வடமராட்சி கடற்பரப்பில், தென்னிலங்கை மீனவர்கள் பிடிக்கப்பட்டனர்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பல பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் இவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன.

இதனையடுத்து கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினர்களும் அந்த மீனவர்களை வெளியேற்றுவதாக தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற எட்டு மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பிற்குள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட போது வடமராட்சி மீனவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சட்ட விரோதமான தொழில்கள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் இந்த விடயத்தில் தமக்கு சாதகமான முடிவினை அமைச்சர் உள்ளிட்ட அரசியல் தரப்பினர்கள் தெரியப்படுத்தும் வேண்டுமென்றும் அப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More