Home இலங்கை  இறுதிப் போரின் இழப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்…

 இறுதிப் போரின் இழப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்…

by admin

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என ஐ.நா. பொதுச்செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை காப்பாற்றும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஐ.நா. மனித உரிமை பேரவை கைவிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் ஐ.நா. வின் நிலைப்பாடு என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் ;.

மேலும் இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலக முடியாது எனவும் சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம் எனவும் இவ் விடயமாக தொடர்ந்தும் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம் எனவும் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்ட விவாதம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் முதல் நாளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More