Home இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் யாழ்ப்பாணக்கிளை மீட்டல்வகுப்புக்களை நடத்தவுள்ளது

பிரிட்டிஷ் கவுன்சிலின் யாழ்ப்பாணக்கிளை மீட்டல்வகுப்புக்களை நடத்தவுள்ளது

by admin

 

பிரிட்டிஷ் கவுன்சிலின் யாழ்ப்பாணக்கிளை  இவ்வாண்டு  சாதாரண தர ஆங்கில இலக்கிய பரீட்சைக்குதோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி மாணவர்களுக்கான மீட்டல்வகுப்புக்களை  நடத்தவுள்ளது.  இவ்  மீட்டல் வகுப்புகள் எதிர்வரும் செப்டம்பர் 22, 23 ஆம் திகதிகளில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் தகவல் தொழினுட்ப மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நாடகம், புனைகதை, உரை நடை, கவிதை ஆகிய பாடங்களுக்கான மீட்டல் வகுப்புக்கள் நடை பெறவுள்ளது. ஒரு பாடத்திற்கு ரூபா 1000/- வீதம்  அறவிடப்படும்.  மூன்று பாடத்திற்காக பதிவுகளை மேற்கொள்ளும் பொழுது மேலதிகமாக ஒரு பாடத்திட்டத்திற்கு ரூபா 1000/- பெறுமதியான நுழைவுச்சீட்டினை இலவசமாகபெற்றுக்கொள்ளலாம்.

நுழைவு சீட்டுகளை பிரிட்டிஷ் கவுன்சிலில் அல்லது நிகழ்வு நடைபெறும் தினம் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியின் தகவல் தொழினுட்ப மண்டபத்திலும் பெற்று கொள்ளலாம்.  பங்குபற்ற விரும்புவோர்  பிரிட்டிஷ்கவுன்சிலின் யாழ்ப்பாணக் கிளை 0217521521 ext 6903 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கில் JETEX 2018 – இலங்கையின் மிகப்பெரிய கல்வி கண்காட்சி மற்றும் வேலை வாய்ப்பு செப்டம்பர் 23,24,25 ஆம்  திகதிகளில் யாழ்ப்பாணம் கே. கே. எஸ் வீதி, கொக்குவிலில்  அமைந்துள்ள செல்வ மஹால்  திருமணமண்டபத்தில்  காலை 9 மணிதொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறும்.  அன்றைய தினம் இலவச தேர்ச்சி மட்ட சோதனை மற்றும் ஆலோசனை வகுப்புகளுக்கான பதிவு,  நூலக வசதிகள் மற்றும் அதற்கானஅங்கத்துவம். இங்கிலாந்து கல்வி மற்றும் பரீட்சை பற்றிய தகவல்கள் விளையாட்டு / போட்டி மற்றும் பரிசுகள் வழங்கல் ஆகிய சேவைகள்  பிரிட்டிஷ்  கவுன்சிலால் வழங்கப்படும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More