Home இலங்கை மந்தை மேற்கு – மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங்கள் கடும் வரட்சியினால் பாதிப்பு

மந்தை மேற்கு – மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங்கள் கடும் வரட்சியினால் பாதிப்பு

by admin

குளோபல்தமிழ்ச் செய்தியாளர்


மந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வரட்சியின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியமடு , முள்ளிக்குளம் , சின்ன வலயன்கட்டு , இரணை இலுப்பக்குளம் , பரிசன் குளம் , கீரிச் சுட்டான் ,விலாத்திக்குளம் , கல் மடு , போன்ற கிராம மக்கள் இவ்வாறு வரட்சியினால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தநிலையில் அப்பகுதிகளுக்கு நேற்று சனிக்கிழமை (22) மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் ஆ.இசந்தியோகு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளார்.-இதன் போது தாம் கடும் வரட்சியின் காரணமாக பாவனைக்கும் , குடிப்பதற்குமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமது கிராமங்களுக்கான போக்குவரத்து , மருத்துவப் பிரச்சனை தொடர்ச்சியாக காணப்படுவதோடு, வரட்சி நிவாரணம், வாழ்வாதார திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் பல்வேறு குறைபாடுகளை தெரிவித்தனர்.இதனையடுத்து பிரதேச சபையின் தலைவர் மிக அவசர தேவையாக உள்ள குடிநீர் மற்றும் வீதி புனரமைப்புகளை உரியவர்களிடம் பேசி உரிய காலத்தில் தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More