Home இலங்கை கிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை

கிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சியில் குடும்ப பெண் ஒருவரைக் காணவில்ல என அவரது கணவர் காவல்துறையில்; முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி இராமநானத் கமம் மருதநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயான மஞ்சுளா என அழைக்கப்படும் நாகராசா முனியம்மா என்பவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக கணவர் நேற்று கிளிநாச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 13ம் திகதி வீட்டிலிருந்து சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்றுதிரும்புவதாக தெரிவித்து சென்ற குறித்த குடும்ப பெண் வீடு திரும்பவில்லை என கணவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண்ணை தமது உவினர்கள் வுPடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய புhதிலும் இன்றுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறித் பெண்ணின் கணவர் தெரிவி்கின்றார்.

தனது மனைவி தொடர்பான தவல்கள் கிடைக்குமிடத்து தந்துதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர். மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கிளிநாச்சி காவல்துறையினரும் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசா என்பவரை 0776753485 எனும் தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் கோரியுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More