இலங்கை பிரதான செய்திகள்

முதலமைச்சர் பதவி முடிவுக்கு வர, தமிழ் மக்கள் பேரவையில் கூடிய கவனம்…

தற்போதைய தலைமைகள் மாறி மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான சாத்தியும் உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் சில பின்னடைவுகளுக்கு அரசியல் ரொட்டித்துண்டுகளுக்காக அறநிலை மறந்த அவையினர் சிலரின் நடவடிக்கையே காரணம் எனவும் அவ்வாறு இருந்த போதும் தமது செயற்பாடுகள் செவ்வனே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்ரம்பர் 25 ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் முதலாவது ஆயுட்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள்; குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்த அவர் கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து மக்களின் தேவைகளை உலகிற்கு எடுத்துக் கூற தன்னால் முடிந்தவற்றை செய்வேன் எனவும் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.