Home இலங்கை என்னைக் கொல்ல சதி – பாதுகாப்பு வேண்டும்

என்னைக் கொல்ல சதி – பாதுகாப்பு வேண்டும்

by admin


பாதாள உலக குழுத் தலைவர் மாகந்­துரே மதுஷின் உத­வி­யுடன் தன்னைக் கொல்வதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்­துள்ளதாக முன்னாள்  பாதுகாப்புச் செயலாளர்  கோத்தபாய ராஜ­பக்ஸ தெரி­வித்­துள்ளார்.

பல்­வேறு வழி­களினூடாக இதனை ஆராய்ந்து பார்த்ததில் இத் தகவல் உண்­மை­யா­னது என்று தெரிய வந்­துள்­ளதாகவும் தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர் தனக்கு வழங்கப்பட்ட முழுமையான  பாது­காப்பு அணியை மீளப்­பெ­று­வது குறித்து ஜனா­தி­பதி மைத்திரிபாலசிரிசேனவிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  தனது பாதுகாப்பு பாதியாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் கூறியதாகவும் பார்த்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்த போதும் பின்னர் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் இது நடந்து ஒன்றரை மாதங்களாகிவிட்டது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

நீதி­மன்­றத்தில் முன்­னி­லை­யாகும் போது தன் மீது தாக்­குதல் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் பாதாள உலகக் குழுத் தலை­வரின் இந்த முயற்­சியை அறிந்து கொண்டு நான் மேலதிக  முன்­னேற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தனக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபருக்கு கோத்தபாய ராஜபக்ஸ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More