Home இலங்கை சாவட்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகம் வெற்றிக்கேடயத்தை தனதாக்கியது :

சாவட்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகம் வெற்றிக்கேடயத்தை தனதாக்கியது :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முருங்கன் பிஎஸ்சி ( PSC )விளையாட்டுக் கழகத்தின் 60 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து கடந்த மூன்று நாட்களாக நடை பெற்ற மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட அணிகள் பங்கு பற்றிய போட்டியின் இறுதிப் போட்டி நேற்று திங்கட்கிழமை(24) மாலை 3 மணியளவில் முருங்கன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

விடத்தல் தீவு ஐக்கிய விளையாட்டு கழகம் மற்றும் சாவட்கட்டு கில்லரி விளையாட்டு கழகம் ஆகிய இரு அணிகளும் இறுதி போட்டிக்கு தெரிவாகிய நிலையில் இரு அணிகளும் கோல்கள் போடாத நிலையில் நேரம் முடிவுக்கு வந்தது. பின்னர் தண்ட உதை வழங்;கப்பட்ட நிலையில் கில்லரி அணி 2 கோல்களையும், ஐக்கிய விளையாட்டு கழகம் 1கோலையும் போட்டு, தொடரில் வெற்றி பெற்ற அணியாக சாவட்கட்டு கில்லரி அணி தெரிவு செய்யப்பட்டது. வெற்றியீட்டிய அணிக்கு வெற்றி கேடயமும் பணபரிசில்களும் வழக்கி வைக்கபட்டது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெற்றி கேடயமும் பணப் பரிசில்களையும் வழங்கி வைத்தார்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More