Home இலங்கை இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு- சர்வதேச தலையீடுகளுக்கு அவசியம் இல்லை. – ஐநாவில் ஜனாதிபதி

இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு- சர்வதேச தலையீடுகளுக்கு அவசியம் இல்லை. – ஐநாவில் ஜனாதிபதி

by admin


சர்வதேச நாடுகள் தலையிட வேண்டாம். எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை அமர்வில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு நேற்றையதினம் நியூயோர்க் நகரிலுள்ள ஐ. நா. தலைமையகத்தில் ஆரம்பமானது.

ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.

இந்த பிரதான அமர்வில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அரச தலைவர்களுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இணைந்துகொண்டுள்ள நிலையில் இன்றையதினம் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை இறைமையுள்ள ஒரு நாடாகும். அதனால் சர்வதேச தலையீடுகளுக்கு அவசியம் இல்லை. தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையை பெற்றுக்கொள்ள ஒத்துழைப்பு வழங்குங்கள் எனத் தெரிவித்தார்.மேலும் இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம், தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலக் மாரப்பன,ராஜித்த சேனாரத்ன, மனோ கணேசன் ஆகியோரும் இந்த அமர்வில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More