Home இலங்கை மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலிபனின் நினைவு நிகழ்வு அனுஸ்டிப்பு

மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலிபனின் நினைவு நிகழ்வு அனுஸ்டிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று புதன்கிழமை(26) மன்னாரில் இரு இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், இன்று புதன் கிழமை காலை 10. 48 மணியளவில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றுள்ளது.-இதன் போது தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த உணர்வு பூர்வமான நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மற்றும்,மத தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். -இதே வேளை தியாக தீபம் திலிபன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம் பெற்றது.

காலை 10.48 மணியளவில் தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது சர்வமதத்தலைவர்கள், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன்,மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலிபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More