Home இலங்கை கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் – வழக்கினை விரைவில் முடிக்குமாறு உத்தரவு

கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் – வழக்கினை விரைவில் முடிக்குமாறு உத்தரவு

by admin


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு கல்கிசை மேலதிக நீதவான் லோசன அபேவிக்ரம குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவினைப் பிறப்பித்த நீதவான் அது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரின் கேள்விகளுக்கு பாதுகாப்பு செயலாளர் பதில்களை வழங்கியிருந்த போதிலும், படுவத்த இரகசிய முகாம் தொடர்பில் எந்த ஆவணமும் அதில் காணப்படவில்லை எனவும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அமைச்சர் சரத் பென்சேகாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் இந்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சில கிடைக்கவில்லை எனவும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More