Home இந்தியா ஐ.நா. சுற்றுச்சூழல் விருது, பிரதமர் மோடிக்கும் வழங்கப்படவுள்ளது…

ஐ.நா. சுற்றுச்சூழல் விருது, பிரதமர் மோடிக்கும் வழங்கப்படவுள்ளது…

by admin


ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும், எதிர் வரும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்பதற்கு உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக உலக அளவில் 6 பேர் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண துணிச்சலாகவும், புதுமையாகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் இந்த விருது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி உள்ளிட்ட 6 பேர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு “சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ (CHAMPIONS OF THE EARTH) என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகிலேயே முதல் முறையாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, முற்றிலும் சூரியமிசக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்துக்கும் விருது வழங்கப்பட உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More