Home இலங்கை இந்தியப் பிரதிநிதிகளுடன் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு – ஊடகங்களுக்கு தகவல் வழங்க மறுப்பு…

இந்தியப் பிரதிநிதிகளுடன் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு – ஊடகங்களுக்கு தகவல் வழங்க மறுப்பு…

by admin


இந்தியாவில் இருந்து இலங்கை சென்றுள்ள பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் சட்டத்தரணி ராதாகிருஸ்ணன், கவிஞர் இனியபாரதி, தினமணி பத்திரிகையின் ஆசிரியர் ஆகியோருடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ஜி.ரி. லிங்கநாதன், து. ரவிகரன் வவுனியா வடக்கு மற்றும் தமிழ் தெற்கு பிரதேச சபைகளின் தலைவர்கள், வவுனியா கல்வியில் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் முன்னாள் பீடாதிபதி உட்பட முக்கியமான சிலரே இ கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது வட பகுதி நிலைமைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பாக அதிகமாக ஆராயப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More