Home இலங்கை விக்னேஸ்வரனின் விசேட மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானம் :

விக்னேஸ்வரனின் விசேட மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானம் :

by admin


வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள விசேட மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் முன்னாள் வட மாகாண மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவரை அமைச்சு பதவியிலிருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீக்கியமைக்கெதிராக பி. டெனிஸ்வரன் மேன்முறையீட்டு மனு செய்திருந்தார்.

இந்தநிலையில் பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிவித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து பி. டெனிஸ்வரன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை எதிர்த்து சிவி விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை  ஒக்ரோபர் மாதம் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More