Home இலங்கை யாழில் சந்தேகத்தின் பேரில் 38 பேர் கைது :

யாழில் சந்தேகத்தின் பேரில் 38 பேர் கைது :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் அவற்றுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, அண்மைக்காலங்களில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட போது,

அண்மையில் எனது ஆளுமைக்கு கீழ் உள்ள காவல் நிலையங்களில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அதிகமாக 10 சம்பவங்கள் மானிப்பாய் காவல் பிரிவிலும், யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 சம்பவங்களும் இடம்பெற்றன. ஏனைய காவல் நிலைய பகுதிகளில் எட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 38 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு, சம்பவங்கள் நடைபெற்ற நீதிமன்ற நியாயாதிக்க நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டு இருந்த போதும் சிலருக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் ஆவா குழுவைச் சாராத வேறு குழு மோதல்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் சாவகச்சேரி அஜித் குழுவின் மீது 5 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More