சவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியாவின் கடல்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போதே இவ்வாறு ஈரான் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment