Home இலங்கை யாழில் வேறு நபரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்க முயற்சித்தவர் கைது…

யாழில் வேறு நபரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்க முயற்சித்தவர் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


யாழ்.நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேறு நபரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்க முயற்சித்த நபர் ஒருவர் வங்கி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ். காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.நகரின் மத்தியில் உள்ள வங்கி ஒன்றின் கிளையிலையே குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து தெரியவருவதாவது , குறித்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஏ.ரி.எம். அட்டையை தவறவிட்டு உள்ளார். அதில் அட்டையின் ரகசிய குறியீட்டையும் எழுதி வைத்துள்ளார். அட்டையை தவற விட்டது உடனடியாக அது தொடர்பில் வங்கிக்கு அறிவித்துஉள்ளார்.

அந்நிலையில் தொலைந்ததாக அறிவிக்கப்பட்ட அட்டையை பயன்படுத்தி ஒருவர் பணத்தினை மீள பெற முயற்சிக்கையில் வங்கி ஊழியர்கள் சுதாகரித்து பணத்தினை மீள பெற முயன்ற நபரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் உதவியுடன் மடக்கி பிடித்து யாழ்ப்பாண காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More