Home இலங்கை ஒதிய மலையை, ஒருநாள் காலை சுற்றிவளைத்த இராணுவத்தினர் ஆண்களை அழைத்துச் சென்று படுகொலை செய்தனர்.

ஒதிய மலையை, ஒருநாள் காலை சுற்றிவளைத்த இராணுவத்தினர் ஆண்களை அழைத்துச் சென்று படுகொலை செய்தனர்.

by admin

ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலைநேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கொரு கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே வடக்கு முதல்வர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி–மணலாற்றில் தொடங்கியசிங்களக் குடியேற்றம் மகாவலிஅதிகாரசபையால் தொடர்ந்துநடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. எமதுவாசகர்கள் பலருக்குமுல்லைத்தீவு,வவுனியாப் பகுதிகளில் என்னநடக்கின்றதென்றேதெரியாமல் இருக்கின்றது. அதுபற்றிவிளக்கமுடியுமா?

பதில் – தாராளமாக! ஆனால் விளக்கம் பலபக்கங்களைப்பிடிக்கும். இவ்வாரம் ஒருபகுதியைத் தந்துமற்றுமொருவாரம் மிகுதியைத் தரஎத்தனிக்கின்றேன்.  உயர்  நிலத்தில் இருந்து மணலை பதிவான நிலங்களுக்கு வாய்க்கால் ஒன்று கொண்டு செல்லும் போது அதனை மணல் ஆறு என்று குறிப்பிடுவது வழக்கம். முல்லைத்தீவில் உள்ள மணலாறு என்ற கிராமம் முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் அது முல்லைத்தீவு,அனுராதபுரம்,திருகோணமலை மேலும் வவுனியா மாவட்டங்களின் எல்லைக் கிராமமாக விளங்கியதே.

அண்மையில்த் தான் அதன் பெயர் வெலி ஓயா என்று மாற்றஞ் செய்யப்பட்டது. இன்று 18 கிராமங்களைக் கொண்டிருக்கின்றது வெலிஓயா. தற்போது 11,189 பேர்களை உள்ளடக்கிய 3336 குடும்பங்கள் இந்தக் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் சிங்கள மக்கள். முன்னர் தற்போதைய வெலிஓயாவை உள்ளடக்கிய 42 கிராமங்களில் காலாதிகாலமாக தமிழ் குடும்பங்களே அங்கு வாழ்ந்து வந்துள்ளன.

கடைசியாக எடுத்த விபரங்களின்  படி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் குறித்த 42 கிராமங்களில் வசித்துவந்துள்ளனர். மேற்படிகிராமங்கள் காலாதிகாலமாகவிவசாயம் செய்துவந்ததமிழ்க் குடும்பங்கள் ஆவன. 1965ம் ஆண்டில் தொண்ணூற்றி ஒன்பது வருடக் குத்தகையில் இக் குடியிருப்புக்களைச் சுற்றியஅரச நிலங்கள் தமிழ் வணிகப் பெரு மக்கள் சிலருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. மேலும் 10 தொடக்கம் 50 ஏக்கர் வரை தனி நபர்கள் குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள். பாரிய வணிக நிறுவனங்கள் பல ஏக்கர் காணிகளை குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள்.

16 நிறுவனங்கள் ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள். நாவலர் பண்ணை,சிலோன் தியேற்றர்ஸ் பண்ணை, கென்ட் பண்ணை, புகையிரதக் குழுப் பண்ணை,தபால் அதிபர்கள் குழுப் பண்ணை,டொலர் பண்ணைபோன்றவை இவற்றுள் அடங்கின. அரசாங்கம் தமிழ் முதலீட்டாளர்கள் பதினான்கு பேருக்குக் கொடுத்த மேற்படி 99 வருட குத்தகைகளை1984 ம் ஆண்டில் இரத்துச் செய்து 42 கிராமங்களிலும் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை இராணுவம் கொண்டு விரட்டி அடித்தது.

இராணுவத்தினர் மேற்படிகிராமங்கள் தோறும் பாரிய கவச வாகனங்களில்  சென்று 48 மணித்தியாலங்களுக்குள் தமிழ் குடும்பங்கள் தமது வீடு,காணிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளை இட்டது. அவ்வாறு வெளி யேறாதோர் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என்று ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து மக்களை அகற்றினர். இந்த இடங்களில் சிங்களவரை இராணுவம் குடியேற்றப் போக விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் போர் மூண்டது.

இக்காலப்பகுதியில் தான் வரலாற்றுத் தடம் பதித்த ஒதிய மலைப் படுகொலைகள் இராணுவத்தால் அரங்கேற்றப் பட்டது.  ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலைநேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தனர்.

வடக்கையும் கிழக்கையும் தொடர் தமிழர் வாழ் இடங்களாக தொடர்ந்திருக்க விட அரசாங்கம் விரும்பாததாலேயே இன்று மகாவெலியைக் காரணம் காட்டி சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசாங்கம் வித்திட்டுள்ளது.

மணலாற்றுடன் அரசாங்கத்தின் கபடத் திட்டம் முடிவடையவில்லை. தற்போதைய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் வட முனையில் (மதுறு ஓயாவின் நதிப்படுக்கை நிலத்தில்) சட்டத்திற்கு மாறாகக் குடியிருந்த சிங்களக் குடும்பங்களை (அவர்கள் அங்கு தொடர்ந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால்) பதவிய எல்லைப் புறங்களில் கொண்டு வந்து குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது]

அங்கிருந்து நெடுங்கேணி வரை சிங்களத் தொடர் குடியேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாகத் தெரிகின்றது. வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் ஒரு சிங்களவர் வாழ் இடை நிலத்தை உண்டாக்கி வட கிழக்கு இணைப்பை ஏற்படாது தடுப்பதே அரசாங்கத்தின்  குறிக்கோள். ஆரிய குண்டம்,டொலர் பண்ணை போன்ற இடங்களில் காடு பற்றிப் போய் இருக்கும் நிலங்கள் துப்புரவாக்கப்படுகின்றன.

நான்கு தெருக்கள் பதவியாவில் இருந்து டொலர் பண்ணை,கும்பகர்ணன் மலை,ஆரியகுண்டம்,கொக்குச்சான் குளம்,கொக்குத் தொடுவாய்,வெடுக்கன் மலைபோன்ற இடங்களுக்குதிறந்தாகிவிட்டது. தற்போது இராணுவம்,விவசாயசேவைகள் அமைச்சு, இல்மினைட் கூட்டுத்தாபனம்,புகையிலை கூட்டுத்தாபனம்,பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்றநிறுவனங்களின் வாகனங்கள் இந்தஅரசதிட்டத்தைநடைமுறைப்படுத்தும் விதத்தில் பாவிக்கப்பட்டுவருகின்றன. டொலர் பண்ணைஅருகேஏற்கனவேசிங்களக் குடியேற்றம் நடந்தாகிவிட்டது.தமிழ் பேசும் வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கோ, பிரதேச செயலாளர்களுக்கோ, காணி அலுவலர்களுக்கோ அங்கு நடை பெற்று வருவதன் சூட்சுமம் தெரிந்துள்ளதாகத் தெரியவில்லை.

அவர்களும் அரசுக்குப் பயந்து தெரிந்து கொள்ள முனைய வில்லையோ அல்லது தெரிந்தும் மௌனம் காத்து வருகின்றார்களோ தெரியவில்லை. அந்தப் பிரதேசம் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு அங்கு நடப்பவை அனைத்தும் அந்தரங்கமாகவே நடை பெற்று வருகின்றன. முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் புல்டோசர்கள் எனப்படும் நிலச்சமன் பொறிகள் அங்கு இரவில் வேலை செய்யும் சத்தத்தைக் கேட்டு வருகின்றார்கள்.  பாரிய நீர் தாங்கிச் செல்லும் குழாய்கள் அல்லது பைப்புக்கள் அங்குகொண்டு செல்வது காணப்பட்டுள்ளது.

1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ந் திகதிய வர்த்தமானி அது காறும் மணல் ஆறு என்றழைக்கப்பட்ட இடத்தை வெலிஓயா என்று குறிப்பிட்டுள்ளது. அதற்கு முன்னர் அங்கு வெலி ஓயா என்றொரு இடம் இருக்கவில்லை. அதன் பின்னர் வெலி ஓயா இலங்கையின் ஒரு தனி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது.  பதவியவிற்கு வடக்கில் இருந்த மணல் ஆறு பதவியவுடன் சேர்த்து வெலி ஓயா என்ற நாமத்துடன் 1987ல் அனுராதபுர நிர்வாக மாவட்டத்தினுள் உள்ளேற்கப் பட்டது.

முதலில் 1984ம் ஆண்டில் காணி  ஆணைக்குலுவின்    கீழ் உலர்ந்தவலயவிவசாயகுடியிருப்பாகத் தொடங்கியமணல் ஆறு பின்னர் 1988ம் ஆண்டில் மகாவெலிபொருளாதாரமுகவாண்மையத்தினால் கையேற்கப்பட்டது. அதன் பின்னர் அதுமகாவெலி’எல்’வலயமாகபிரகடனப்படுத்தப்பட்டது. 1988ம் ஆண்டுஏப்ரல் 16ந் திகதிமணல் ஆறு உத்தியோகபூர்வமாகவெலிஓயாவாகப் பெயர் மாற்றப்படடது.

இங்குதான் மணலாறில் தொடங்கியபெரும்பான்மையினரின் பெருந்திட்டம் மகாவெலியூடாகநடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றமைதெரியவருகிறது. மகாவலிநீர் வரப்போகின்றதுஎன்று கூறியேஅதன் நீர் கொண்டுசெல்லப்போகும் இடங்கள் வலயங்களாகஅடையாளப்படுத்தப்பட்டன.  இன்றுவரைவில் மகாவெலிநீர் ஒருசொட்டேனும் வடமாகாணத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. தற்போதையநிலையில்வரப்போவதுமில்லை. ஆனால் அதனைச் சாட்டாகவைத்துசிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன.

குடியேற்றங்களில் மக்களை இருத்தும் போதுஅவ்வூர் மக்களுக்குமுன்னுரிமைவழங்கவேண்டும். அவ்வாறுஎவரும் முன்வராதநிலையில் முதலில் அப் பிரதேசத்திற்கும் பின்னர் மாவட்டத்திற்கும் அதன் பின் மாகாணத்திற்கும் முன்னுரிமைவழங்கப்படவேண்டும்.

இதுவேசர்வதேசரீதியாகஏற்கப்பட்டுள்ளநடைமுறை. தமிழ் மக்கட் தலைவர்களுடன் அரசாங்கம் முன்னர் செய்துகொண்ட (பின்னர் கைவிடப்பட்ட) உடன்பாடுகளில் மாகாணத்தில் தமிழ் மக்கள் முன்வராவிடில் நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்குமுன்னுரிமைவழங்கவேண்டும் என்றுகூட கூறப்பட்டிருந்தது.

இவற்றைஎல்லாம் புறந்தள்ளியேசிறைசென்றுவந்தசிங்களக் குற்றவாளிகளை இவ் விடங்களில் குடியேற்றியதுஅப்போதையஅரசாங்கம். அதாவதுவடகிழக்குமாகாணங்களைப் பிரிக்கநடுவில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படவேண்டும் என்றகபடநோக்குடனேயேசிங்களத் தலைவர்கள் இது காறும் காய் நகர்த்திவந்துள்ளனர்.  போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளால் மேற்படிசிங்களக் குடியேற்றவாசிகள் விரட்டப்பட்டனர்.

போர் முடிந்தபின்னர் மகாவெலிஅதிகாரசபைவெலிஓயாசெயற்றிட்டத்தின் கீழ் மணல் ஆறு இருந்த இடங்களில் எல்லாம் மீண்டும் சிங்களக் குடியேற்றங்களைஏற்படுத்தியது. அவர்களின் திட்டம் முல்லைத்தீவு,திருகோணமலை,வவுனியா,அனுராதபுரமாவட்டங்களை இணைப்பதாய் அமைந்தது.

முன்னர் தமிழ் மக்கள் இருந்த இடங்களில் பலவந்தமாகச் சிங்களமக்கள் அரசாங்கத்தால் போருக்குமுன்னர் குடியேற்றப்பட்டார்கள். போர் வரக் காரணங்களில் ஒன்று இவ்வாறானசிங்களக் குடியேற்றங்களே. போரின் போதுசிங்களக் குடியேற்றவாசிகள் விரட்டப்பட்டார்கள்.

போர் முடிந்ததும் முன்னர் சிங்களவர் வசித்த இடங்களில் நாம் அவர்களைக் குடியிருத்துகின்றோம் என்று கூறிபாரம்பரியமாகஅங்குகுடியிருந்தசிங்களவரைவிடுதலைப் புலிகள் விரட்டியதாகவும் அவர்களைஅரசாங்கம் போர் முடிந்தபின் குடியேற்றுவதாகவும் ஊர் உலகத்திற்குஅறிவித்தேமேற்படிசிங்களகுடியேற்றத்தைவழிநடத்திச் சென்றுகொண்டிருக்கின்றார்கள் அரசாங்கத்தினர்.

தமிழர் வாழ்ந்த இடங்களில் சிங்களமக்களைக் குடியிருத்தி,காணிகொடுத்து,வீடுகட்டப் பணம் கொடுத்து,விசேடஅதிரடிப்படையைக் கொண்டுபாதுகாப்பும் கொடுத்துவருகின்றதுஅரசாங்கம்.
நான்குமாவட்டங்களுக்குஉட்பட்டமகாவெலிசெயற்றிட்டத்தின் நிர்வாகம் அனுராதபுரத்தில் இருந்தேநடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

அதனால்த்தான் மற்றையமாவட்டஅரசாங்கஅதிபர்களுக்கோஅலுவலர்களுக்கோஅங்குஎன்னநடைபெறுகின்றதுஎன்றுதெரிவதில்லை போலும்.

இத் தருணத்தில் மகாவலிஅதிகாரசபைபற்றியசிலவிளக்கங்களைத் தருவது பொருத்தமாக இருக்கும் என்றுநினைக்கின்றேன்.

1979ம் ஆண்டில் 23வது சட்ட மூலமாக வேமகாவலி அதிகாரசபை உருவானது. அதன் மூன்றாம் ஷரத்து முக்கியமானது. ஜனாதிபதியின் ஒப்புதலோடு உரிய அமைச்சரின் கருத்துப்படி மகா வெலிகங்கையின் நீரை அல்லது வேறேதேனும் முக்கியநதியின் நீரை எங்கெல்லாம் பாவித்து அங்கு முன்னேற்றம் காண முடியுமோ அந்த இடத்தை அவர் வர்த்தமானியில் பிரசுரிப்பதன் மூலம் ‘விசேட நிலப்பகுதி’என்று அதனைப் பிரகடனப்படுத்தலாம்.  இவ்வாறானபிரகடனம் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.

சகலசிங்களமக்கள் பிரதிநிதிகளும் அமைச்சரின் இவ்வாறானகருத்தைஏற்கத் தவறமாட்டார்கள். அதன் அடிப்படையில்த்தான் 1988ம் ஆண்டில் ஒருவிசேடவர்த்தமானி மூலம் மகாவலி’L ‘ வலயம் தாபிக்கப்பட்டது.

அதன் பின் 2007ம் ஆண்டில் இன்னொரு வர்த்தமானியில் அது மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க வடக்கையும் கிழக்கையும் பிரிக்குமுகமாக வேமகா வெலிநீரைச் சாட்டி மகாவெலி அதிகாரசபை வடமாகாணக் காணிகளைக் கையேற்றுள்ளது.

மணலாறில் தொடங்கி தற்போது மகாவெலி மூலம் சிங்கள பேராதிக்கம் வடமாகாணத்தில் தொடர்கின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More