Home இலங்கை படையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் – இலங்கையே விசாரிக்க வேண்டும்…

படையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் – இலங்கையே விசாரிக்க வேண்டும்…

by admin


இலங்கை படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2015 இல் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தியுள்ளது.

நீதித்துறை உட்பட பொது ஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நல்லிணக்கம் உட்பட யுத்தம் சம்பந்தமான விடயங்களிற்கு பெருமளவிற்கு தீர்வை கண்டுள்ளது.

படையினரிடமிருந்த பொதுமக்களின் நிலங்களை பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளை இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. என்ற விடயங்களை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு உதவிகளை வரவேற்பதாக தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கையின் நீதித்துறையே விசாரணை செய்வது சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு நடவடிக்கைகளை பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய மனித உரிமை பேரவையின் அமர்வுகளிற்கு அறிக்கைகளை சமர்பித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More