Home இலங்கை பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்

பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்

by admin


இலங்கை கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்ச்சிக்கு காரணம் பணம் முதலிடம் பெற்றமையாலேயே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சி வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் பாடசாலை கிரிக்கெட் அணி மற்றும் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது எமக்கு ஒரு கௌரவம் இருந்தது. குறிப்பாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது பெரிய அளவிலான கௌரவம் எமக்கு இருந்தது. நாங்கள் தான் 2 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துதாக என்ற எண்ணம் எம்மிடம் இருந்தமை எமக்கு பெரிய கௌரவமாக இருந்தது.

ஆனால் தற்போது காசுக்காக விளையாடும் கலாச்சாரம் கிரிக்கெட்டில் உருவாகியுள்ளது. நாடு என்ற வகையிலும் கிரிக்கெட் விளையாடும் காலம் இல்லாமல் போய்விட்டது.  பணம் முதலிடம் பெற்றதால் எமது கிரிக்கெட் விளையாட்டு பாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையை மாற்றினால்தான் கிரிக்கெட்டை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar October 12, 2018 - 9:00 am

Yes that’s true.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More