Home இலங்கை யாழ்.பல்கலைகழக மாணவர்களின் நடைபவனி அனுராதபுரத்தினை சென்றடைந்தது….

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் நடைபவனி அனுராதபுரத்தினை சென்றடைந்தது….

by admin

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து கட்நத 9ம் தகித் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்த நடைபவனி அனுராதபுரத்தினை சென்றடைந்துள்ளது.
இன்று சனிக்கிழமை காலை அனுராதபுரம் மாவட்டத்தினை சென்றடைந்த நடைபவனி இன்று பிற்பகல் சிறைச்சாலையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு மதவாச்சியை சென்றடைந்த நடைபவனியானது அனுராதபுரத்தினை நோக்கிய பயணத்தினை ஆரமப்பித்திருந்தது. அந்தவகையில் இன்று பிற்பகல் அனுராதபுரம் சிறைச்சாலையில் நடைபவனியை நிறைவு செய்து கொள்ளவுள்ளநிலையில் அங்கு கிழக்கு மற்றும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் பொது அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More