Home இலங்கை 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா?

11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா?

by admin

5 மாணவர்கள் உட்பட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை கைது செய்ய புலனாய்வுத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குறித்த தளபதி பூரணமாக அறிந்திருந்தார் என்பதற்கான சாட்சிகள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் கோவை மேலதிக ஆலோசனை பெறுவதற்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புலனாய்வுத் துறையினர் முன்னெடுக்கும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க அத்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விசாரணைக் கோவையில் பிரபல சாட்சிகள் வெளிபடுத்தப்ப்ட்டுள்ளதை அவதானித்துள்ள சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள், அச்சாட்சிகளின் பிரகாரம் ஏனைய விசாரணைகளையும் முன்னெடுத்து நிறைவு செய்ய கடந்தவாரம் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலேயே மேலும் சிலரைக் கைது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான சாட்சிகள் வெளிபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் புலனாய்வுத்துறையினர் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva October 15, 2018 - 5:14 pm

நாட்டையே கொள்ளையிட்டுச் சூறையாடிய/ 35 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் மற்றும் பல்லாயிரம் பொது மக்களின் அழிப்புக்கு காரணமான ராஜபக்ஷர்களைக் கைது செய்து குற்றவாளிகளாக்கித் தண்டிக்கும் துணிவற்ற ஜனாதிபதியும், பிரதமரும், ‘நீ முந்தி, நான் முந்தி’ என அவர்களைக் காப்பாற்றும் முனைப்பிலேயே இருக்கின்றார்கள் போல் தெரிகின்றது.

அப்படிப்பட்டவர்களால், குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு அடைக்கலம் வழங்கியதாக, ‘இன்று குற்றச்சாட்டுக்குள்ளான’, கடற்படைத் தளபதியைக் கைது செய்யும் துணிவு எங்கிருந்து வரும்? அப்படித்தான் ஒரு சாட்டுக்குக் கைது செய்தாலும், அவர் மறு நாளே பிணையில் விடுவிக்கப்படுவார், என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் இது போன்ற கைது நாடகங்கள் நாட்டுக்கு அவசியம்தானா?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More