Home இலங்கை TNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….

TNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….

by admin


இலங்கையின் பல்வேறு சிறைகளல் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மனிதாபிமானமற்ற ரீதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளமை வரவேற்க்கத்தக்க விடயம் என முன்னான் வடகிழக்கு மகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இவ்வாறே தமிழ் அரசியற் கைதிகள் விவகாரத்தில் வாக்குறுதி அளிப்பதுவும் பின்னர் அவற்றை காற்றிலே பறக்க விடுவதுமான நடைமுறையைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அவ்வாறு இந்தத் தடவை நடந்து கொள்ளக் கூடாது என எதிர்பார்க்கிறோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழுள்ள அரசியற் கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் வகையாக தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் அதிகாரக் கதிரைகளைக் காப்பாற்றுவதிலும், சர்வதேச மட்டத்தில் அதன் கௌரவத்தைப் பேணுவதிலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே உறுதுணையாக செயற்பட்டு வந்துள்ளனர். அதற்காக அவர்கள் தமது அரசியல் முகமூடிகளையெல்லாம் மாற்றிக் கொண்டுள்ளதுடன் எத்தனையோ அடிப்படையான விடயங்களில் தமிழ் மக்களுக்கு தேர்தற் காலங்களில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் பின்னர் அவர்கள் எந்த அரங்கத்திலும் முன்னெடுக்காமற் போனவை அனைவரும் அறிந்ததே.

தமிழ் அரசியற் கைதிகளின் விடயம் இப்போது தமிழர்கள் அனைவரினதும் கரிசனைக்குரிய முதன்மையான விடயமாகியுள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெற்று பாராளுமன்றத்தில் இப்போதும் பலமான ஒரு நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர்.

தமிழ் அரசியற் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக தாம் எதிர்நோக்கிய அரசியல் நெருக்கடியை கெட்டித்தனமாக வாக்குறுதிகள் மூலம் சமாளித்து விட்டதாகக் கருதாமல் தமது சாணக்கியங்களை அரசை நோக்கிப் பிரயோகித்து மிக விரைவில் அரசியற் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள கடமையாகும்.

அடுத்த மாதம் அரசாங்கம் சமர்ப்பிக்கப் போகும் வரவு செலவுத் திட்டமானது 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு உரிய வகையில் தமது வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அவற்றை விரிவுபடுத்துவதற்குமான தந்திரங்களைக் கொண்ட ஒன்றாகவே அமையப் போகின்றது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளபாதார நெருக்கடிகளை மேலும் மோசமானதாகவே ஆக்கும்.

அத்துடன் பொருளாதார நிலையில் கீழ்மட்டத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் கீழேயே தள்ளும். ஆந்த வகையில் தமிழ் மக்களும் பாதிக்கப்படப் போகின்றார்கள். அவ்வாறான ஒரு வரவு செலவுத் திட்டத்தை ஒரு பொறுப்பான எதிர்க் கட்சியாகச் செயற்பட்டு விமர்சித்து, எதிர்த்து வாக்களிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More