Home இலங்கை மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை :

மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை :

by admin

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய மொஹமட் நிசாம்தீன் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் தெரிவித்து அவர் மீது அவுஸ்திரேலிய காவற்துறையினர் குற்றம்சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More