Home இலங்கை இணைப்பு 2 – வெள்ளநிவாரணம் குறித்து ஆராய்வதற்காக சபாநாயகர் கிளிநொச்சியில் :

இணைப்பு 2 – வெள்ளநிவாரணம் குறித்து ஆராய்வதற்காக சபாநாயகர் கிளிநொச்சியில் :

by admin

 
சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று கிளிநொச்சிக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளர். விசேட உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு சென்ற அவர் காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலகத்தில் வெள்ளம் அனர்த்தம் தொடர்பான நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீளவும் இயல்பு வாழ்க்கை தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் தொடர்பிலும் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டார்.

அத்தோடு தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாவுக்கான காசேலைகளையும் வழங்கி வைத்த அவர். தேசிய சேமிப்பு வங்கியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், அமைச்சின் செயலாளர்கள் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, திணைக்களங்களின் உயரதிகாரிகள். ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

சபாநாயகர் இன்று வடக்கிற்கு செல்கின்றார்

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றையதினம் வடக்கிற்கு பயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காகவே சபாநாயகர் இவ்வாறு வடக்கிற்கு செல்லவுள்ளார்.

இதன்போது சபாநாயகருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் செல்லவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் பற்றிய விசேட கூட்டம் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தல் இடம்பெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More