Home இலங்கை தமிழக மீனவர்கள் நால்வர் கைது

தமிழக மீனவர்கள் நால்வர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நெடுந்தீவு கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் நால்வரை காரைநகர் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வந்தவர்கள் இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை காரைநகர் கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் பயணித்த படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கபட்டு உள்ளனர். அவர்களை யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்னர்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலையும் சட்டவிரோதமாக நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More