ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஸ,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் ஊடகஅறிக்கைகளை வெளியிடும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்  என தெரிவித்துள்ளார்.

சதிமுயற்சியில் ஈடுபடுபவர்களை பலப்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என மகிந்த ராஜபக்ஸ சிறிசேன முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதியை  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு தயாசிறிஜயசேகர அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ஸ  இவ்வாறு தெரிவித்துள்ளார்

மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் என்றால் அவர் கட்சிக்கு திரும்பி தம்முடன் இணைந்து பணியாற்றவேண்டும், என தெரிவித்திருந்த தயாசிறிஜயசேகர மகிந்த ராஜபக்ஸ மற்றொரு கட்சியுடன் இணைந்து பணியாற்ற முயன்றால் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையை இழக்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி தான் சுதந்திரக்கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என்கிறார், கட்சியின் ஆலோசகர் என்கிறார் இது குறித்து அவரிடம் கேள்வியெழுப்ப தீர்மானித்துள்ளோம் எனவும் தயாசிறிஜயசேகர குறிப்பிட்டிருந்தார்.