Home இலங்கை கிளிநொச்சி பளை இயக்கச்சி வீதி விபத்தில், ஸ்தலத்திலேயே மூவர் பலி….

கிளிநொச்சி பளை இயக்கச்சி வீதி விபத்தில், ஸ்தலத்திலேயே மூவர் பலி….

by admin

கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகி உள்ளனர். பளை இயக்கச்சி பகுதியில் இன்று 08-01-2019 மாலை இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியத்தில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் கட்டைக்காடு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமுக்கு டீசல் அடிப்பதற்காக பயணித்த இராணுவத்தின் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பளையைச் சேர்ந்த 36 வயதுடைய பி.ஜெயக்குமார், பளை மாசார் பகுதியைச் சேர்ந்த, 32 வயதுடைய கே. குகதாஸ், சுழிபுரம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ். ரதீஸ்வரன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பளை காவற்துறையினரும் கிளிநொச்சி தடயவியல் காவற்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran January 8, 2019 - 8:10 pm

இது விபத்தா அல்லது கொலையா அல்லது தமிழ் இன அழிப்பின் தொடர்ச்சியா? இராணுவத்தின் கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி தமிழர்கள் இறப்பது முற்றிலும் சாதாரணமாகிவிட்டது.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More