Home இலங்கை சாவகச்சேரி வர்த்தக நிலையத்தில் 10 இலட்சம் கொள்ளை

சாவகச்சேரி வர்த்தக நிலையத்தில் 10 இலட்சம் கொள்ளை

by admin

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று இன்று (09) அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது என சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சி.சி.டீவி கண்காணிப்பு கருவியின் இணைப்புக்களை துண்டித்து விட்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதன்போது, சுமார் ஏழு லட்சம் ரூபா பணம் மற்றும் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என சுமார் பத்து லட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளது என முறையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இக்கொள்ளை இடம்பெற்ற போது வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் கடையின் பின்புறம் உறக்கத்தில் இருந்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தடயவியல் (சோக்கோ) காவல்துறையினருடன் இணைந்து சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More