Home இலங்கை அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அமர்வு…

அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அமர்வு…

by admin

அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அமர்வை நியமித்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமர்வு குறித்த வழக்கினை ஜனவரி 10-ம் திகதியான நாளை விசாரணைக்கு எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 நீதிபதிகள் அமர்வே இந்த வழக்கினை விசாரிக்கும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒக்டோபர் 29-ம் திகதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

அதன்பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதனையடுத்து குறித்த மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் அமர்வு முன் கடந்தஒஅக்டோபர் 29ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.

இதன்போது , இந்த மனுக்களைப் புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஐந்து நீதிபதிகள் அமர்வு தொடர்பான உத்தரவு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More