Home இலங்கை சந்திரிக்கா முல்லைத்தீவு சென்றார்…

சந்திரிக்கா முல்லைத்தீவு சென்றார்…

by admin

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் இன்று காலை 11 மணியளவில் உலங்குவானூர்தி மூலம் முல்லைத்தீவுக்கு சென்றிருந்த அவரை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வரவேற்றுள்ளார்.
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் கலந்துகொண்டுள்ளார்.

அவருடைய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த மாதம் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பில் இதன்போது கேட்டறிந்துகொண்ட அவர் அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்தியுள்ளார்.  தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

1 comment

S.Kajendran January 9, 2019 - 7:09 am

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் இப்போதைய அரசில் எப்போது அமைச்சரானார்? அவருடைய அமைச்சின் பெயர் என்ன?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More