Home இலங்கை முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் சந்திரிக்கா….

முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் சந்திரிக்கா….

by admin


முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் இடம்பெறும் சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்

இலங்கயையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரணதுங்க முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பயணம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ளார்

அந்தவகையில் அவருடைய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த மாதம் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட இலங்கயையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரணதுங்க அந்த நிகழ்வை நிறைவு செய்தபின், முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் இடம்பெறும் சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்

இங்கு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் இலங்கயையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரணதுங்க வழங்கி வைத்துள்ளார்.

நிகழ்வில் இலங்கயையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரணதுங்கவுடன் ஊனுர் அமைப்பின் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராஜா உள்ளிட்ட அரச அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More