Home இலங்கை இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு, ஆளுநர் கண்காணிப்பு பயணம்…

இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு, ஆளுநர் கண்காணிப்பு பயணம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


கிளிநொச்சி பிரதேசத்திற்கு பயணம் செய்துள்ள வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  இன்று(10)நண்பகல் இரணைமடு நீர்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

இதன்போது இரணைமடு நீர்தேக்கத்தின் வான்கதவுகளில் சில குறைபாடுகள் உள்ளதாகவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகள் சரியான கண்காணிப்புக்களை மேற்கொள்ளாது அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் அதனாலேயே அண்மையில் கிளிநொச்சி மக்கள் பாரிய அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாகவும் மக்களிடமிருந்து கிடைத்திருந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர் அவர்கள் இதுதொடர்பில் உடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய இரு நிறுவனங்கள் இன்னமும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதனை அறிந்துகொண்ட ஆளுநர் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகவே தொடர்புகொண்டு உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அத்தோடு ஐந்து நாட்களுக்கு ஒருதடவை உரிய அதிகாரிகள் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.  ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவன் அவர்கள் உள்ளிட அரச அதிகாரிகள் இதன்போது உடனிருந்தார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More