பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் மத்திய பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ பரவலால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வெதுப்பகமொன்றிலேயே மேற்படி வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டுக் காவல்துறையினர் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை எனத் தெதிவ்துள்ளனர்.
மேலும் குறித்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
எரிவாயு கசிவு காரணமாகவே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
Add Comment